உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு
கிளிநொச்சி
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று 05.06.2025 கிளிநொச்சியில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதானப்பணியை கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
A9வீதியின் வைத்தியசாலை முதல் பசுமைப்பூங்கா வரை சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
தேசிய சுற்றடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (05.06.2025) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவும் கலந்துகொண்டார். முதலில் அரசாங்க அதிபர் மரக்கன்றினை நாட்டினார்.
அதன்பின்னர் சம நேரத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மரங்களை நாட்டிவைத்தனர்.
இன்றையதின தின நிகழ்வுக்கு 450 மரக்கன்றுகளை கிறீன் லேயர் நிறுவனத்தினர் இலவசமாக வழங்கினர்.
கொட்டகலை
கொட்டகலை டிரேட்டன் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தோட்ட நிர்வாகத்தினால் மரநடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, அயல் தோட்டங்களை சேரந்த முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
திருகோணமலை
தேசிய சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டம் நேற்றைய தினம் (04.06.2025) இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண சபையின் நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையில் இடம்பெற்றது.









முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
