இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி

Ministry of Finance Sri Lanka Sri Lanka Government Economy of Sri Lanka Crime NPP Government
By Vethu May 01, 2026 03:50 AM GMT
Report

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சி பீடம் ஏறிய அநுர அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியின் பின்னர், பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஊழலை முழுமையாக ஒழிக்கப் போவதாக சூளுரைத்திருந்த அநுர அரசாங்கத்தின் பலமான அமைச்சுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அநுரவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியமைச்சில் 2.5 மில்லியன் டொலர் மோசடியான முறையில் காணாமல் போயுள்ளது.

2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம்! நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்..

2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம்! நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்..

கொலை செய்யப்பட்டாரா அதிகாரி..

இது இணையவழி தாக்குதல் காரணமாக மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்த போதும், அது உள்ளக ரீதியில்  நடந்த பாரிய மோசடியாக வெளிவந்துள்ளது.

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி | Sri Lanka S Massive Financial Fraud Twist

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த மோசடி நடைபெற்ற போதும், அரசினால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில், அது வெளியுலகிற்கு கசிந்துள்ளது.

இந்நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக நிதியமைச்சில் நிதி கையாள்கையுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் இன்று குளியாப்பிட்டியிலுள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவித்துள்ளது. இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மோசடியின் பின்னணி

ஹேக்கர்களால் களவாடப்பட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த மரணம் அரசிற்குள் நடந்த பாரிய மோசடியை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் குறித்த அதிகாரி அச்சம் காரணமாக உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்திருந்த போதும், இதுவொரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி | Sri Lanka S Massive Financial Fraud Twist  

மோசடியுடன் தொடர்புடையவர்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதை தவிர்ப்பதற்காக அந்த அதிகாரி  கொலை செய்யப்பட்டாரா  என்ற ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மூன்று அதிகாரிகள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, மோசடியின் பின்னணியிலுள்ள குற்றவாளியை அம்பலப்படுத்த வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

கடந்த அரசாங்கங்களில் நடந்த மோசடிகளை சுட்டிக்காட்டி வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கத்திற்குள் நடந்துள்ள இந்த பாரிய மோசடியை எவ்வாறு ஈடு செய்யப் போகிறார் என ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: 2 மாத கால வரம்பு - பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: 2 மாத கால வரம்பு - பிறப்பிக்கப்பட்டது உத்தரவு

ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 01 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US