இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சி பீடம் ஏறிய அநுர அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியின் பின்னர், பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் ஊழலை முழுமையாக ஒழிக்கப் போவதாக சூளுரைத்திருந்த அநுர அரசாங்கத்தின் பலமான அமைச்சுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அநுரவின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியமைச்சில் 2.5 மில்லியன் டொலர் மோசடியான முறையில் காணாமல் போயுள்ளது.
கொலை செய்யப்பட்டாரா அதிகாரி..
இது இணையவழி தாக்குதல் காரணமாக மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்த போதும், அது உள்ளக ரீதியில் நடந்த பாரிய மோசடியாக வெளிவந்துள்ளது.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த மோசடி நடைபெற்ற போதும், அரசினால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில், அது வெளியுலகிற்கு கசிந்துள்ளது.
இந்நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக நிதியமைச்சில் நிதி கையாள்கையுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இன்று குளியாப்பிட்டியிலுள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பான விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவித்துள்ளது. இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மோசடியின் பின்னணி
ஹேக்கர்களால் களவாடப்பட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த மரணம் அரசிற்குள் நடந்த பாரிய மோசடியை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் குறித்த அதிகாரி அச்சம் காரணமாக உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்திருந்த போதும், இதுவொரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
மோசடியுடன் தொடர்புடையவர்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதை தவிர்ப்பதற்காக அந்த அதிகாரி கொலை செய்யப்பட்டாரா என்ற ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மூன்று அதிகாரிகள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, மோசடியின் பின்னணியிலுள்ள குற்றவாளியை அம்பலப்படுத்த வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
கடந்த அரசாங்கங்களில் நடந்த மோசடிகளை சுட்டிக்காட்டி வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கத்திற்குள் நடந்துள்ள இந்த பாரிய மோசடியை எவ்வாறு ஈடு செய்யப் போகிறார் என ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 30 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.