ரவூப் ஹக்கீமிடம் பிமல் ரத்நாயக்க முன்வைத்துள்ள கோரிக்கை
அண்மையில் படகு மூலம் இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா ஏதிலிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க¸ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அரசாங்கம் இந்த விடயத்தை மனிதாபிமான முறையில் கையாளும் என்று கூறினார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
ஏதிலிகள், மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த மக்கள் இரக்கத்துடனும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளும் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும்.
எனவே, இந்த சூழ்நிலையை அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்ல. தேசிய மக்கள் சக்தியே இப்போது இலங்கையில் முஸ்லிம்களிடையே பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ளது என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
