அர்ச்சுனா எம்பி உட்பட்ட ஒன்பது வேட்பாளர்கள் குறித்து விசாரணை
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் செலவுகள்
இந்த விசாரணைகள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், ஏ. உமாகரன் ராசையா, எஸ். மயூரன், டி. கிருஸ்ணானந்த், என். கவுசல்யா மற்றும் குருசாமி சுரேன் ஆகியோரின் தேர்தல் செலவுகள் தொடர்பிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், வேட்பாளர் சசிகலா ரவிராஜாவின் வாக்குமூலத்தை மட்டுமே பொலிஸார் இதுவரை பதிவு செய்துள்ளனர் ஏனையவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அதன் விபரங்களை பொலிஸார் தேர்தல் ஆணையகத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri