முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்ப்பால் தான்

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Independent Writer May 19, 2024 01:32 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

திருகோணமலை மாவிலாறு பகுதியிலயிருந்த தமிழ் மக்களுடைய பிரதேசங்களுக்கு இலங்கை அரசு பொருளாதார தடை விதித்தது.

இதனால் எந்தவொரு அடிப்படை வசதியுமே இல்லாமல் பாரபட்சப்படுத்தி பார்க்கப்பட்டிருந்த மக்கள் மாவிலாறு அணைய மூடினார்கள். இதனை சாக்காக வைத்துக்கொண்டு நடைமுறையில் இருந்த சமாதான உடன்படிக்கைய கிழித்து நான்காம் கட்ட ஈழப்போரை தொடக்கியது இலங்கை அரசு.

இறுதியில் வன்னி கிழக்கு பகுதியில் மிக உறுதியாக இருந்த (இருட்டுமடு பகுதியில் அதி உக்கிரமான தாக்குதல்கள் நடக்கின்றது. இதன் போது தான் தடைசெய்யப்பட்ட chemical boms , cluster bombs,, posperas bombs, வல்லரசு நாடுகள் வழங்கிய அதி நவீன ஆயுதங்கள், பல்குழல் ஏவுகணைகள், படை உதவிகள், இந்திய அரசின் உதவிகள் என்று பலதும் சேர்ந்து எங்களை வீழ்த்தியது.

ஊழிக்காலம் ஒரு பவுணினுடைய விலை 1000 ரூபா. ஆனால் ஒரு கிலோ மீனின் விலை 2000 ரூபாவாகவிருந்தது. இரண்டு பவுண் குடுத்து ஒரு கிலோ மீன் வாங்க வேண்டிய நிலை இருந்தது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்ப்பால் தான் | Mullivakal Porridge For Tamils

இதை இப்போது இந்த காலத்தில் கணக்கிட்டால் ஒரு பவுண் ஒரு லச்சம் என்று வைப்போம். இரண்டு இலட்சம் கொடுத்து ஒரு கிலோ மீன் வாங்கிய காலமாக முள்ளிவாய்க்கால் இருந்திருக்கிறது.

எங்கையும் இருந்து எடுத்த கொஞ்சம் அரிசி, அங்க அங்க இருந்த ஊத்து தண்ணி, சிலவேளைகளில் பால் பக்கற்று கிடைத்தால் அதிலும் ஒரு கொஞ்சம் சேர்த்து தமிழர் புனர்வாழ்வு கழகம் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்தது. கஞ்சிக்காக காத்திருந்த மக்கள்? அந்தக் கஞ்சியை வாங்குவதற்கு காலையில் இருந்தே ஜனங்கள் வரிசையாக நிற்கும்.

கஞ்சிக்கு உப்புச் சேர்க்கவில்லை

கஞ்சி கிடைக்கும் முதல் செல் வந்து விழும். கஞ்சி வரிசைக்குள்ளும் செல் விழும். ஜனங்கள் காயப்படுவார்கள். குருதி தெறித்து கஞ்சிக்குள்ளும் விழும். ஆனால் காயப்பட்டவர்களை தூக்கிக்கொண்டு போனபின் வரிசையில் மறுபடியும் கூடி கஞ்சியை வாங்கிக்கொண்டு போவார்கள்.

எதனை ஆயுதமாக வைத்து எம்மை அழித்தீர்களோ அதனையே எழுச்சி வடிவமாக கொண்டு புரட்சி செய்வோம் என்று. 2018ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக தமிழ் சிவில் சமூக அமையம்(TCSF).அறிமுகப்படுத்தியது. முள்ளிவாய்க்கால் கஞ்சியில் மாறாட்டம்? ஒரு உள்ளூராட்சி சபை உறுப்பினர் சொன்னார். நாங்கள் முதலில் கஞ்சிக்கு உப்புச் சேர்க்கவில்லை.

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்ப்பால் தான் | Mullivakal Porridge For Tamils

பாலை குறைத்துச் சேர்த்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அதை வழமையான கஞ்சி போல சமைத்தோம் என்று. முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு எவ்வாறு சுவை சேர்ப்பது எண்டு சர்வதேச ஊடகம் ஒன்றில் ஒரு நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி இனப்படுகொலையின் அடையாளம்.

சுவையில்லாமல் இருப்பது தான் அதனுடைய அடையாளம். சிங்களவருக்கும் கஞ்சிக்கும்? கோட்டா கோ கம போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு இது இனப்படுகொலை கஞ்சி, தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள், அவர்களுக்காக பிரார்த்திப்போம் என்றெல்லாம் கூறி அந்த கஞ்சி பரிமாறப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில காய்ச்சப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி மஞ்சள் சேர்க்கப்பட்டிருந்ததோடு , பால்சோறு போல ஆக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் அதற்கு என்று ஒரு சுவை உண்டு அதற்குள் ஆழமான வழிகளும் கதைகளும் உண்டு. அது இனப்படுகொலையின் வலியை உரத்துச்சொல்லும் தமிழர்களின் இன்னுமொரு உயிராயுதம் முள்ளிவாக்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்பால் தான். இதுதான் தீர்வு? இலங்கையில் , தமிழகத்தில் , கனேடிய நாடாளுமன்றத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என நிறுவியுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தமிழர்களுக்கு ஒரு தாய்ப்பால் தான் | Mullivakal Porridge For Tamils

இனப்படுகொலைக்கு உள்ளான இனம் அவ் இனத்தின் உயிர்ப்புக்காக தம் உயிர்களை இழந்தவர்களை நினைவுகூர வேண்டும். அவர்களை ஆராதிக்க வேண்டும்.அதற்கு இளைய தலைமுறையிடம் ஞாபகங்களை கடத்த வேண்டும்.

எங்களில் முப்பது ஆண்டுகால யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதனை உணர்வு பூர்வமாக நினைவுகூருவர். இரண்டாம் தலைமுறை நேரம் கிடைக்கும் போது அதனை நினைவுகூருவர். மூன்றாம் தலைமுறை என்னவென்றே அறியாமல் போய்விடும்.

அதற்காக தான் இளைய தலைமுறையினருக்கு ஞாபகங்களை கடத்தும் செயற்பாடு பல்கலைக்கழக மாணவர்கள், முஸ்லிம் சமூகத்தினர், வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கட்சிகள், இன்னும் பல அமைப்புக்களும் சேர்ந்து இனப்படுகொலை புரிந்த இராணுவத்துக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியது.

கி. அலெக்ஷன்.

அரசறிவியற்துறை

யாழ்.பல்கலைக்கழகம் 

விடுதலைப் புலிகளின் தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு நடந்த முயற்சிகள்! சவேந்திர சில்வா

விடுதலைப் புலிகளின் தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு நடந்த முயற்சிகள்! சவேந்திர சில்வா

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் - தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் - தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 19 May, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US