பாலஸ்தீனத்தின் இனப்படுகொலையை கண்டிக்கும் அரசாங்கம்! பொதுமகன் விடுத்துள்ள கேள்வி
இஸ்ரேலிய (Israel) அரசு பாலஸ்தீனத்தின் (Palestine) மீது மேற்கொண்ட இனப்படுகொலையை கண்டித்த அரசாங்கம், 15 ஆண்டுகள் ஆகிவிட்ட தமிழினப்படுகொலைக்கோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ இன்றுவரை நீதி பெற்றுத் தரவில்லை என பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"1958ஆம் ஆண்டு முதல் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் ஆட்சிபீடம் ஏறிய ஆட்சியாளர்களால் தமிழர்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதன் உச்சக்கட்டமாக கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்களாகவும் காணாமலும் ஆக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், பாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்துள்ள அரசாங்கத்தினால் இதுவரை எங்களுக்கு நீதி பெற்றுத் தரமுடியவில்லை” என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |