அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
அரச சேவையில் சம்பள அதிகரிப்புக்காக 330 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதில் 2025 ஆம் ஆண்டுக்கு 110 பில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டுக்கு 110 பில்லியன் ரூபாவும் 2027 ஆம் ஆண்டுக்கு 110 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் மிகவும் திறமையான மற்றும் கௌரவமான சேவையை பேணுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சம்பள உயர்வு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.
அரசியலமைப்பு பிரச்சினை
அரச சேவையை வலுப்படுத்த தற்போது ஆயிரக்கணக்கான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிராம சேவை அரசியலமைப்பு பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

1,938 கிராம அலுவலர் வெற்றிடங்கள் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், பதிவாளர் சேவை ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் சம்பளம்
அரச அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கும் திட்டம் 2025ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டதுஃ எனினும் அரசு ஊழியர்களின் சம்பளம் நீண்ட காலமாக அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மூத்த அதிகாரிகளின் திறனை அதிகரிக்க இந்திய உதவியுடன் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆண்டுகளில் 1,500 அதிகாரிகள் குழுவிற்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.