இந்திய காவிப் புலனாய்வு தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் : கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள்

Sri Lankan Tamils Jaffna Mullivaikal Remembrance Day Sri Lanka Final War Selvarajah Kajendren
By Kajinthan May 18, 2024 06:47 AM GMT
Report

எமது வரலாற்று நிகழ்வான இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை குழப்பும் நோக்கில் காவி உடை தரித்த இந்திய புலனாய்வு அமைப்பு செயற்பாட்டு வருகின்ற நிலையில் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(S. Kajendran) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை வரலாற்று நினைவிடத்தை நேற்று (17.05.2024)பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தியை மறித்த பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பநிலை

முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தியை மறித்த பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பநிலை

அரசியல் தீர்வு விடயங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 75 வருட காலமாக ஆட்சி பீடம் ஏறிய எந்த ஒரு அரசாங்கமும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களை முன்னெடுத்துச் செல்லாத நிலையில் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 15ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அனைத்து தமிழ் மக்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற சபதத்தை எடுக்க வேண்டும்.

இந்திய காவிப் புலனாய்வு தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் : கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள் | Mullivaikal Remembrance Day Gajendran Mp Request

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஆட்சிக்கு வந்த சி ங்கள அரசாங்கம் தமிழ் மக்களை கொலை செய்து துன்புறுத்தி மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி அட்டூழியங்களை செய்து வந்துள்ளது.

தமிழ் தலைவர்கள் ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய போது சிங்கள அரசாங்கம் அவர்களை கொலை செய்த நிலையில் 1980 பின் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இருப்புக்காகவும் தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

வாகரையில் பொலிஸாரின் தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

வாகரையில் பொலிஸாரின் தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

படுகொலை செய்த வரலாறுகள்

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறிய சிங்கள அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த வரலாற்றே மிஞ்சியது. 2006 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சர்வதேசத்தின் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள்.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததில் ஸ்ரீ லங்கா முப்படையுடன் சேர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட தமிழ் ஆயுத குழுக்களான கருணா குழு, பிள்ளையான் குழு , புளொட் அமைப்பு, டக்ளாஸ் தேவானந்தாவின் ஈபிடிபி, சிறிரெலோ ஆகியவற்றினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நல்லூரில் காட்சிப்படுத்தியுள்ளோம்.

இந்திய காவிப் புலனாய்வு தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் : கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள் | Mullivaikal Remembrance Day Gajendran Mp Request

இதனை ஏன் காட்சிப்படுத்தினோம் என்றால் எமது இனத்தை படுகொலை செய்த வரலாறுகள் எதிர்கால சந்ததியினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவும் எதிர்கால சந்ததிகினருக்கு இதனை எடுத்துச் செல்லும் நோக்கிலும் காட்சிப்படுத்தினோம்.

2010 ஆம் ஆண்டிலிருந்து எமது இயக்கம் இறுதி யுத்ததில் எமது மக்கள் அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் நோக்கில் எமது இயக்கமே ஆரம்பித்து வைத்தது.

இறுதி யுத்தத்தின் பேரவலத்தினை தாங்கி நிற்கும் நந்திக்கடல்! உணர்வுபூர்வ அஞ்சலி ஆரம்பம்

இறுதி யுத்தத்தின் பேரவலத்தினை தாங்கி நிற்கும் நந்திக்கடல்! உணர்வுபூர்வ அஞ்சலி ஆரம்பம்

சமஷ்டி அரசியல் அமைப்பு

தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சியையும் பதின் மூன்றாவது திருத்தத்தையும் ஏற்க மறுத்ததன் விளைவே எமது இனம் அழிக்கப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எமது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இனப் படுகொலை என்பதை இலங்கை அரசும் சர்வதேசமும் ஏற்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை பாரப்படுத்துவதே தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும்.

இந்திய காவிப் புலனாய்வு தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் : கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள் | Mullivaikal Remembrance Day Gajendran Mp Request

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவுக்கு நாம் ஒன்றை கூற விரும்புகிறோம் நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம் முள்ளிவாய்க்கால் நினைவு வார இறுதியில் எமது உறுதி மொழியாக ஒற்றை ஆட்சியை நிராகரிப்போம் 13 வது திருத்தத்தை நிராகரிப்போம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வந்த ஏக்கிய ராஜ்சிய என்ற இடைக்கால வரவை நிராகரிப்போம் என உறுதிமொழி எடுக்குமாறு கூறியிருந்தோம் அது நடைபெறவில்லை.

அகவை எமது பயணத்தை யாரும் திசை மாற்றக் கூடாத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மக்கள் புறக்கணிப்பதோடு இந்திய காவியப் புலனாய்வாளர்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா அதிகாரிகளை நிலைகுலைய வைத்த 2009 இன் முக்கிய காணொளி

ஐ.நா அதிகாரிகளை நிலைகுலைய வைத்த 2009 இன் முக்கிய காணொளி

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US