ஐ.நா அதிகாரிகளை நிலைகுலைய வைத்த 2009 இன் முக்கிய காணொளி
இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஆவணப்படுத்தப்பட்ட காணொளிகள் விசாரணைக்கு வழங்கப்பட்டபோது அவை ஐ.நா அதிகாரிகளை நிலைகுலைய வைத்துள்ளதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தலைமைகள் வேறுபாடின்றி தங்களது கிராமங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை காய்ச்சி ஒற்றுமையாக வழங்கும் பட்சத்தில் இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு அவை அதிர்ச்சி செய்தியாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தமிழ் மக்களின் பலத்தினை மீண்டும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றும், இணைகின்ற இனங்களுக்கு பின்னால் நிற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
