முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு செயற்பாடு

Mullaitivu Sri Lankan Peoples Sri Lankan Schools Education
By Uky(ஊகி) Sep 14, 2024 07:37 PM GMT
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தமிழ்மொழி புறக்கணிப்புச் செயற்பாடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இப்பாடசாலையின் 90ஆம் ஆண்டு நிறைவு நாளை ஒட்டி நடைபெற்ற விழாவில் மொழி அவமதிப்புச் செயற்பாடு நடைபெற்றுள்ளதாக தமிழ் மொழி ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் மொழி மூலப் பாடசாலையாக, தமிழ்க்கிராமம் ஒன்றில் உள்ள அப்பாடசாலையானது தன் பெயரைக் கூட சரியாக எழுத்துப்பிழை இல்லாது எழுதிக் கொள்ள முடியாததாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

பெயரில் ஏற்பட்ட பிழை 

துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் அதன் 90ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றிருந்தது.

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு செயற்பாடு | Mullaitivu School Event Forgot Tamil Name Error

அந்த விழாவின் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாடசாலையின் பெயர் தவறாக இருந்தது அங்கு கூடியிருந்த தமிழார்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

"பண்டார வன்னியன்" என வரவேண்டிய இடத்தில் பண்டர வன்னியன் என " டா" வரவேண்டிய இடத்தில் "ட " என்ற எழுத்து இடப்பட்டிருந்தது.

நெட்டெழுத்தில் வரவேண்டிய பெயர் குற்றெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துப் பிழையோடு பெயரை எழுதுதல் மொழித்தவறு மட்டுமல்ல, அந்த மொழியை அவமதிப்பதாகவே கொள்ள வேண்டும் என நிகழ்வு தொடர்பில் தமிழார்வலரும் பாடசாலை ஒன்றின் அதிபருமாக உள்ள தமிழார்வலர் தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.

ரணிலின் ஆட்சியில் ஸ்தாபிக்கப்படவுள்ள ஆணைக்குழுக்கள்

ரணிலின் ஆட்சியில் ஸ்தாபிக்கப்படவுள்ள ஆணைக்குழுக்கள்

நிறைவு விழாவில் தவறு

90ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் என குறிப்பிட்டு காட்சிப்படுத்த வேண்டிய இடத்தில் 90ஆம் ஆண்டு நினைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் என குறிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு செயற்பாடு | Mullaitivu School Event Forgot Tamil Name Error

இது பொருட்பிழையைக் கொண்டுள்ளதாக தமிழார்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கற்சிலைமடு பண்டார வன்னியன் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு பரிசளிப்பு விழாவாகவும் அது அமையும் படி விரிவாக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருக்கும் போது 90ஆம் ஆண்டு நினைவு விழா என்பது அமங்களமான உணர்வை ஏற்படுத்தி விடும். நிறைவு விழா என்பதே பொருத்தப்பாடாக இருக்கும் என அவர்கள் மேலும் தங்கள் வாதத்தினை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், நிகழ்ச்சி ஒழுங்கு முறைகளிலும் வழமைக்கு மாறான அணுகல் இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.

கவனிக்கப்படாத சுட்டிக்காட்டல் 

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மேற்படி தமிழார்வலர் எழுத்துத் தவறு தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஆசிரியை ஒருவரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் அது தொடர்பில் அவர்கள் அக்கறை கொண்டதாக தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு செயற்பாடு | Mullaitivu School Event Forgot Tamil Name Error

மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிகழ்வு குறித்த அறிவிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் சீர் செய்யவோ அல்லது பிழையாக உள்ள அதனை அகற்றவோ இறுதிவரை முயற்சிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

பொலனறுவையில் நடைபெற்றிருந்த ஒரு தொல்பொருட்கள் தொடர்பான கண்காட்சியொன்றில் தமிழ் மொழியில் எழுதப்பட்டவற்றில் சில எழுத்துப் பிழையோடு இருந்ததை தனது குழுவினர் அவதானித்தனர்.

அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த எழுத்துத் தவறின் தார்பரியத்தினை எடுத்துரைத்து இருந்தனர்.அதன் விளைவாக உடனடியாகவே அவை திருத்தி எழுதி வைக்கப்படுவதற்கு அவர்கள் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்தில் இது போல் அவதானிக்கப்பட்ட எழுத்துத் தவறினை சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் அக்கறை கொள்ளாதது தனக்கு வருத்தமளிப்பதோடு மொழி அவமதிப்பை அவர்கள் செய்வதாக அவர்கள் மீது கோபம் ஏற்படுவதாகவும் அவர் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

விசேட போக்குவரத்து சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு

விசேட போக்குவரத்து சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு

ஏற்படவுள்ள பாரிய விளைவுகள் 

தமிழர் பகுதியில் அதிகளவில் மக்களை கூட்டி நடத்தப்பட்ட ஒரு கலை, கலாசார அம்சங்களை வெளிக்காட்டும் ஆண்டு நிறைவு விழாவில்; அதுவும் ஒரு பாடசாலையின் ஆண்டு நிறைவு விழாவில்; இப்பாடசாலையின் பெயரில் ஏற்பட்ட எழுத்துத் தவறினை கண்டுகொள்ளாதது தவறாக நடந்ததா?

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு செயற்பாடு | Mullaitivu School Event Forgot Tamil Name Error

அல்லது, வேண்டுமென்றே தமிழ் மொழியை அவமதிப்புக்குள்ளாக்க செய்யப்பட்ட செயற்பாடாக உள்ளதோ? என சந்தேகிக்க வைப்பதாக தன் கருத்துக்களை இது தொடர்பில் மேற்கொண்ட கேட்டல்களின் போது கவிஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஊடக வெளிப்படுத்தல்களுக்கான எல்லா பயன்பாடுகளின் போதும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பின்னணியில் காட்சிப்படுத்தப்பட்ட எழுத்துப்பிழையோடு உள்ள பெயரே கொண்டு செல்லப்படும்.

இது மொழியை சரியாக எழுதுவதில் தேர்வற்ற மக்களா இவர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கும் என்பது திண்ணம்.

வடமாகாண கல்வித் திணைக்களம் 

சரிபார்த்தல் என்பதும் செயற்பாட்டில் கம்பீரமாக தோற்றமளிப்பதற்கு சிறந்த நேர்த்தியான அணுகல் வேண்டும் என்பதும் நடைபெற்ற ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் கருத்தில் எடுக்கவில்லை என்பதை ஏற்பாட்டாளர்களும் பாடசாலைச் சமூகமும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு செயற்பாடு | Mullaitivu School Event Forgot Tamil Name Error

இந்நிகழ்வில் கல்விப்புலமையாளர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட போதும் தவறோடு உள்ள காட்சிப்படுத்தலுக்குப் பதிலாக சரியாக உள்ளதை மாற்றிட்டுக்கொள்ளவோ அல்லது அதனை அகற்றி விடவோ முயற்சிக்கவில்லை.

சிறுபிள்ளத்தனமாக அதனை கண்டும் காணாமல் சென்றது தமிழ் மொழியை அவமதிப்பதாகவே கருதவேண்டியுள்ளதாக தமிழார்வலர்கள் தங்கள் விசனத்தை வெளிப்படுத்துவதோடு, இனிவரும் நிகழ்வுகளிலாவது இது போன்ற மொழி அவதிக்கப்படும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர்கள் தங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் இது தொடர்பில் கவனமெடுக்குமா? என்பதை இனிவரும் அதன் செயற்பாடுகளின் ஊடாகவே அவதானிக்க முடியும் என்பதும் நோக்கத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US