நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது! தர்மப்பிரிய திசாநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது என தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பணி
இந்த வாகனம், எவ்வாறான வாகனம் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை முன்னெடுப்பதற்கு வாகனங்கள் மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன வாகனமொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரிய செலவு
பழைய வாகனங்களில் உதிரிப் பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை பழுதுபார்ப்பது பாரிய செலவினை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அரச வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
