பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண்! - அவுஸ்திரேலியாவில் சம்பவம்
அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைளுடன் தாய் ஒருவர் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 22 மணி நேரம் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
