கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் மகளும் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி 17 லட்சத்து 30ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகரான பெண் ஒருவரும் மகளுமே இவ்வாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகளும் கைது
கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் இருவரும் 61 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாயும் மகளும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு Fly Dubai Airlines இன் F.Z-549 விமானம் மூலம் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரின் பயணப் பைகளில் இருந்து 78,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிகரட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        