லெபனானில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் திட்டம் குறித்து எச்சரிக்கை
இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் இந்த மோதலின் ஒரு முக்கிய முனையாக மாறக்கூடும் எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளர் அலி ரிஸ்க் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளவும், 2024ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பெற்ற வெற்றியைத் தக்கவைக்கவும் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, லெபனானுக்குள் இஸ்ரேல் ஒரு மிகப்பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலைமுன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு
அமெரிக்காவின் நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அலி ரிஸ்க், லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா எதிர்க்காமல் மௌனம் காப்பது அல்லது அதற்கு உடந்தையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

எதிர்வரும் வாரங்கள் லெபனானுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும், நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரிவினைகள் மற்றும் அதிகரித்து வரும் வாதப்பிரதிவாதங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, லெபனானின் ஷியா சமூகத்தினர் இந்தத் தாக்குதல்களால் மேலும் அந்நியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இது அந்தப் பிராந்தியத்தில் மிகவும் பயங்கரமான மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு