300,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் நிலுவையில்..
இலங்கையில் தற்போது மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர் உரிமப்பத்திரம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், அமைச்சக ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவற்றை அச்சிட்டு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமமும் இந்த ஆண்டுக்குள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் எனஅவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒரு மில்லியன் அட்டைகள்
கூடுதலாக, ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகளை வாங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் (09) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்துக்கான அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தின் போதே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
குழுவில் உரையாற்றிய அமைச்சர், நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதை விரைவுபடுத்த ஒவ்வொரு மாகாணத்திலும் அச்சிடும் இயந்திரங்களை நிறுவுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam