ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள்! உக்ரைனுக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா
ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன், ரஷ்யாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளதுடன்,போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணைகள் இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் இராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
போர் களத்தில் படையினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை முதன்முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள ரஷ்யா
ரஷ்ய - உக்ரைன் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய விமானம்! வெளியான காணொளி
போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு!
ரஷ்யாவில் குவிந்து கிடக்கும் அணுவாயுதங்கள்! அம்பலமாகும் மறைக்கப்பட்ட ரகசியங்கள்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
