போர் களத்தில் படையினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை முதன்முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள ரஷ்யா
உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் இராணுவம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்திருந்தது.
மேலும், ரஷ்ய இராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியிருந்தது.
இருப்பினும் தமது தரப்பு உயிரிழப்புக்கள் தொடர்பில் ரஷ்யா இதுவரை எந்த விதமான தகவல்களையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில்,ரஷ்ய ஆயுதப் படையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை முதன்முறையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதுடன்,அது குறித்த எண்ணிக்கையை வெளியிடவில்லை.
“சிறப்பு ராணுவ நடவடிக்கையின் போது ரஷ்ய இராணுவத்தினர் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இராணுவத்தினருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன” என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம்! உக்ரைன் இராணுவம் அறிவிப்பு
ரஷ்ய - உக்ரைன் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய விமானம்! வெளியான காணொளி
போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு