உலக வங்கி தூதுக்குழுவினருக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் விசேட சந்திப்பு(Photos)
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினர், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை சந்தித்துள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சில் நேற்று (11.12.2023) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தடையின்றி நீரை விநியோகிப்பதற்கு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், நீர்வழங்கல் தொடர்பான அனைத்து அரச திணைக்களங்கள், அரச நிர்வாக பொறிமுறை மற்றும் தனியார் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தனி அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
உலக வங்கியின் உதவி
இந்நிலையில், நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகளை வரவேற்ற உலக வங்கி குழுவினர், அமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியின் உதவியுடன் நீர்வழங்கல் துறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் சுத்தமான குடிநீர் இலக்குக்கும் பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கை அடைவதற்கு அமைச்சால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு தொடரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
