ஈழத்தமிழர்களின் குறைந்தபட்ச அபிலாசைகளை முன்னெடுக்க நான் தயார் : மனோகணேசன் உறுதி
ஈழத்தமிழ் சகோதரர்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளை நடைமுறை சாத்தியமான முறையில் விட்டுக்கொடுக்காமல் முன் எடுக்கும் வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வடக்கு கிழக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (22.03.2024) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயதை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கூறியதாவது,
குறைந்தபட்ச உடன்பாடு
“எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்களுடன் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில், மாகாண சபைகள் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச உடன்பாட்டை காண்பது தொடர்பில் கலந்து உரையாடப்பட்டுள்ளது.

சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன், குறைந்தபட்ச உடன்பாட்டை காணும் சிங்கள பிரதான கட்சிகள், தலைவர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அந்த உடன்பாட்டை இடம்பெற செய்ய வேண்டும் என கலந்து உரையாடினோம்.
எதிர்வரும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலா ஜனாதிபதி தேர்தலா. அவ்வாறாயின் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள், பொது தமிழ் வேட்பாளர் ஆகிய விடயங்கள் பற்றியும் கலந்து உரையாடினோம்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள்
வாக்களியுங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம் என்ற நிலைபாட்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்கு கோர சிங்கள பிரதான கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு இனிமேல் இடம் தர முடியாது என்ற பொது நிலைபாட்டை பற்றியும் உரையாடினோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியால், மலையக தமிழர் தொடர்பில் சமூக நீதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து சிங்கள பிரதான கட்சிகளுடன் எமது கட்சி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், எமது ஆவண நிலைப்பாடுகள் கட்சிகளின் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறுவதை பொறுத்தே எமது நிலைப்பாடு அமையும் என்ற முடிவை நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்பதை நான் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்து கூறினேன்" என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri