ஜனாதிபதி ரணில் மற்றும் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று மாலை டோக்கியோவில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலாக இது இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்

ஜப்பானின் முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நிலையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்களாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி

மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து
விவாதித்ததுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுக்கள் மற்றும்
பேச்சு வார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, மோடி, ரணிலிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan