மாவீரர் தினத்தில் கைதான மட்டக்களப்பு மாணவன்: பிணை ஏற்பாடு குறித்து சாணக்கியன் விளக்கம்(Video)
மாவீரர் தின நிகழ்வின்போது வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் தனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்திய இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை இன்றைய தினம்(19.12.2023) நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்று 11 மணியாவில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4 பேருக்கு பிணை வழங்கும் நடவடிக்கை துரித கதியில் இடம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்...
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri