மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை குறித்து ஆராய்வு
மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் நேற்று (29.02.2024) மதியம் நடைப்பெற்றுள்ளது.
மகா சிவராத்திரி நிகழ்வு
இதன் போது எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பாகவும், முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
முக்கியமாக போக்குவரத்து,சுகாதாரம், குடி நீர்,உணவு தங்குமிட ஏற்பாடுகள்,பாதுகாப்பு உள்ளடங்களாக முன்னெடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் ராமகிருஷ்ணன்,திணைக்கள தலைவர்கள்,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



