சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பாக இயக்குநர் களஞ்சியம் பகிரங்க வேண்டுகோள்
சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், "நமது இனத்தின் விடுதலைக்காக எத்தனையோ பேர் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கின்றனர்.
அந்த வகையில் தனது வாழ்வின் பெரும்பகுதியை இனத்தின் விடுதலை என்ற பெரும் கனவை சுமந்து சிறைக்கதவுகளுக்கு பின்னால் துளைத்துக்கொண்ட சாந்தன் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |