காலியில் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
காலி பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்ட் இடிந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் அக்மீமனவைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்றும், அவர் நிறுவனத்தின் உதவி மேலாளராகப் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த இளைஞர் தரை தளத்தில் இருந்ததாகவும், தரை தளத்திலிருந்து மூன்றாவது மாடிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும்போது, லிஃப்ட் மூன்றாவது மாடியில் இருந்து அவரது தலையில் விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
