சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது
புத்தளத்தில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்ட சுமார் 640 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வண்டியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இனைந்து நேற்று (27) இரவு கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோதே சுமார் 650 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம்
குறித்த கையடக்கத் தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு வரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியையும் நுரைச்சோலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
