கச்சதீவில் காப்பாற்றப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் துணை தூதரகத்தில் ஒப்படைப்பு
கச்சதீவுக்கு அண்மையில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் இன்றையதினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்றையதினம் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு கடற்றொழிலாளர்களை மீட்டுள்ளனர்.
இரண்டு கடற்றொழிலாளர்கள்
அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இருவரும் நேற்றையதினம் நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இன்றையதினம் குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் நாளையதினம் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
