கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் பாலம் சேதம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள முக்கிய பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிந்தவூர் - மாட்டுப்பள்ளை பிரதேசத்தில், குறித்த பிரதான வீதியில் இருக்கும் பாலம் இன்றைய முன்னிரவில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உடைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதை
இதன் காரணமாக கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகன சாரதிகளை மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கிருந்த நோயாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri