கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் பாலம் சேதம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள முக்கிய பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிந்தவூர் - மாட்டுப்பள்ளை பிரதேசத்தில், குறித்த பிரதான வீதியில் இருக்கும் பாலம் இன்றைய முன்னிரவில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உடைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதை
இதன் காரணமாக கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகன சாரதிகளை மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கிருந்த நோயாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam