புதுக்குடியிருப்பில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதம்: மக்கள் விசனம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்னும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்காத நிலையில் மக்கள் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் சொந்த காணிகளில் பிள்ளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்ட காணிகள், மற்றும் பெற்றோர்கள் இறப்பின் பின்னர் காணிக்கு உரிதானவர்களுக்கு வழங்கும் காணிகள், காணிப்பிணக்கில் தீர்க்கப்படாமல் இன்னும் பல குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிட் காலப்பகுதி தொடக்கம் தற்போதுவரை அரச அதிகாரிகள் அசமந்தப்போக்கான பதிலினையே வழங்கிவருகின்றார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நடமாடும் சேவை
எனவே மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடமாடும் சேவையினை நடத்தவேண்டும் எனவும், இதுதொடர்பில் வடமாகாண காணிபயன்பாட்டு குழு கவனத்திற்கு கொண்டுசெல்ல பிரதேச செயலாளர் ஆவண செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், காணிக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காமையினால் பல ஆண்டுகளாக மின்சார இணைப்பினை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும், விவசாய செய்கைக்கு கடனினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் காணப்படுவதாக விவசாயிகள் கவலைவெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 7 நிமிடங்கள் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
