குருநாகல் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
குருநாகலின் (Kurunegala) பல பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு காணல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் (Nazeer Ahmat) தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குருநாகலிலுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நகர்ப் பகுதிகளில் வாழும் மக்களின் வரி மதிப்பீ்ட்டுப் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்கள் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளால் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கைகள்
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர், "மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுப்பதன் ஊடாக நிரந்தரத் தீர்வுகள் பெறப்படும்.

அத்துடன், இப்பகுதி இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.
மேலும், அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர சபையைின் முன்னாள் உறுப்பினர் மற்றும் குருநாகல் பெரிய பள்ளிவாசலின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan