களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில விகாரை வீதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபர்கள், வீட்டின் வாயிலிலும், வீட்டையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது, யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், நிதி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan