ஈரானின் மிலேச்சத்தனமான தாக்குதல்.. சரமாரியாக திருப்பி அடிக்கும் இஸ்ரேல்!
புதிய இணைப்பு
தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் மீது இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் விமானப்படை நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் குறிவைக்கப்பட்டது.
இதன்போது, தலைமையகத்தின் கட்டிடங்களில் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சகம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
முதலாம் இணைப்பு
இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என ஈரானியப் படைகள் கலப்பினத் தாக்குதலை நடத்தின.
அந்த தாக்குதலின் போது இஸ்ரேலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.
பதில் தாக்குதல்
இந்நிலையில், ஈரானின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் முகமாக இஸ்ரேல் ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகளை தாக்கியுள்ளது.
🚨BREAKING: The Israeli Air Force just completely destroyed the Shahran Oil Depot in Iran.
— Vivid.🇮🇱 (@VividProwess) June 14, 2025
Massive FAFO.pic.twitter.com/wz6foykx2M
இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் கிடங்கில் நிலையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, செயல்பாட்டு மற்றும் மீட்புப் படைகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை இஸ்ரேலிய ட்ரோன்கள் தாக்கியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 12 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
