ஊடகவியலாளர் ஜ.நடேசன் படுகொலை: நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Batticaloa Jaffna Journalists In Sri Lanka
By Bavan May 31, 2023 12:16 PM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ.நடேசனுக்கு 2021ஆம் ஆண்டு இராணுவ உயர் அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்ததாகச் சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 3 வருடங்களின் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தொழில் சார் ஊடக சங்கம் மட்டு ஊடக அமையம் இணைந்து படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூவியில் இன்றைய தினம் (31.05.2023) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் மற்றும் வணபிதா சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

ஊடகவியலாளர் ஜ.நடேசன் படுகொலை: நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் | Journalist Aiyathurai Nadesan

விடுதலைப் புலிகள் போராட்டம்

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் பிரிந்ததற்குப் பின்னர் முதலாவது வேட்டுவைத்த ஊடகவியலாளர் நடேசன் பார்க்கின்றோம் 22 வருடங்களாக வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளராகக் கடமையாற்றி வந்த அவரை இழந்திருக்கின்றோம்.

2000 ஆயிரம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாக 2001ஆம் ஆண்டு வெற்றியளித்தது இருந்தபோதும் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் போராட்டம் மௌனித்ததற்குப் பிறகு இன்று நாங்கள் பார்க்கின்றபோது ஒரு தலைவரை ஒற்றக் கதிரையில் பார்த்த நாங்கள் இப்போது 10 தலைவர்களை 10 கதிரையில் இன்று பார்க்கின்றதுடன் யார் தலைவர் என யாருக்கும் தெரியாத நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் 19 வருடம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

எமது விடுதலைப் போராட்டத்துக்காக பல்வேறு பட்டவர்கள் போராடினால் கூட ஊடகவியலாளர் பங்களிப்பு அந்த கால நிலையில் வடகிழக்கு ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியத்துக்கான விடுதலை கிடைக்க வேண்டும் என அவர்களின் பேனா முனையில் போராடியதன் நிமிர்தமாக இலங்கை பேரினவாதம் திட்டமிட்டு 46 ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தனர்.

பிரேமதாசா தொடக்கம் இப்போது உள்ள ஜனாதிபதி வரையில் ஜனாதிபதிகள் மாறியிருக்கலாம் ஆட்சி மாறியிருக்கலாம் ஆனால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்காதா சூழ்நிலையில் இந்த 19 நினைவேந்தல் செய்துகொண்டிருக்கின்றோம்.

ஊடகவியலாளர் ஜ.நடேசன் படுகொலை: நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் | Journalist Aiyathurai Nadesan

நீதியான நியாயமான ஒரு தீர்வு

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்குச் இலங்கை அரசாங்கம் நீதி செய்ய மாட்டார்கள் எனவே சர்வதேச மட்டத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறிவருகின்றோம். 

வடகிழக்கில் பல ஊடகவியலாளர்கள் துணிந்து பல விடையங்களை வெளிக் கொண்டுவந்தாலும் கூட அவர்களுக்கும் அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றதுடன் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு செல்லலாம் என்ற அச்சுறுத்தலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

ஆகவே, சமாதானம் என்று சொல்லுகின்றவர்கள் நாட்டில் யுத்தமில்லை என்று சொல்லுபவர்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் யுத்தம் மௌனித்தாலும் கூட தமிழ் மக்களுக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வு வரும் வரை நாங்கள் அச்சுறுத்தப்பட்ட ஒரு இனமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழல் வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகம் இதனை கணக்கில் எடுத்து வடகிழக்கு இணைந்து சயநிர்ணய உரிமையிலான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US