வாகன பாவனை தொடர்பில் நடைமுறைக்கு வரும் தடை
வாகனங்களின் கண்ணாடிகளில் தொழில் பதவிகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் கண்ணாடிகளில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருமான வரி உரிமம்
சிலர் தங்கள் நிலையை உணராமல் சமூகத்திற்குக் காட்டுவதற்காக வாகனங்களின் கண்ணாடிகளில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி உரிமம் மட்டுமே வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்ட அனுமதிக்கப்படுகிறது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 21 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam