ஜனவரியில் சுற்றுலா அலை! 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு 2 இலட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சீன ஹெக்கர்களால் உளவு பார்க்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகம்! வெளியான புலனாய்வுத் தகவல்கள்
சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜனவரி 15 ஆம் திகதி மாத்திரம் 10 ஆயிரத்து 483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் 25 வரை இந்தியாவில் இருந்து 41 ஆயிரத்து 603 பேரும், பிரிட்டனில் இருந்து 23 ஆயிரத்து 329 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 876 பேரும் இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்குச் சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கி வருகின்றது.
கடந்த வருடம் 23 இலட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.