பாகிஸ்தானை போல தரகர் இல்லை! வளைகுடா பதற்றத்திற்கு மத்தியில் புதிய சர்ச்சையை கிளப்பும் இந்தியா
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் தலையீட்டை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.
பாகிஸ்தானை ஒரு "தரகர் நாடு" (Broker Country) என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானின் அணுகுமுறையை கடுமையாகச் சாடினார்.
பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்
இது குறித்து அக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைப் போல இடைத்தரகர் வேலையையோ அல்லது தரகர் (Dalal) நாடாகவோ செயல்படாது" என்று அமைச்சர் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலைத் தணிக்கத் தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படத் தயார் என பாகிஸ்தான் சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தியாவின் இந்த கருத்து அமைந்துள்ளது.
1981ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசுத் தரப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை எளிதாக்குவதற்காக, அமெரிக்காவில் பாகிஸ்தான் ஒரு 'நலன் பிரிவை' (Interests Section) நடத்தி வருவதையும் இந்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
1981 முதல் தொடரும் தரகர் வேலை
இவை அனைத்தும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு நலன்களுக்காகச் செய்யப்படும் நகர்வுகள் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலில் இருந்து இதுவரை 4,25,000 இந்தியர்கள் ஈரானில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அரச முன்னுரிமை அளித்து வருவதையும், இதர நாடுகளின் அரசியல் நாடகங்களில் இந்தியா சிக்காது என்பதையும் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சியானது வெறும் கண்துடைப்பு என்றும், இந்தியா தனது தனித்துவமான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam