மீண்டும் இஸ்ரேலை நோக்கி பாய்ச்சப்படும் ஈரானிய ஏவுகணைகள்!
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானிய அரச ஊடகம்
சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.
ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
This is the moment Iranian state TV was forced to stop its broadcast after it said it was attacked by an Israeli missile attack in Tehran. pic.twitter.com/7RoUtbCuYL
— Al Jazeera English (@AJEnglish) June 16, 2025
இந்நிலையில், தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் - ஈரானுக்கு இடையில் போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த, ட்ரம்ப் இஸ்ரேல் மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் நிறுத்தம் ஏற்பட்டால், அணுசக்தி பேச்சுவார்த்தைகளில், நெகிழ்வுத்தன்மையுடன் ஈடுபட தயாராக உள்ளதாகவும், ஈரான், குறித்த நாடுகளிடம் தெரிவித்துள்ளது.
கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிடம், தெஹ்ரான் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை, ஈரானின், இந்த கோரிக்கை குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை.
மேலதிக தகவல் - இந்ரஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
