இஸ்ரேலில் கொத்துக் கொத்தாக வெடித்துச் சிதறும் ஈரானின் ஏவுகணைகள்
ஈரான்-இஸ்ரேல் தாக்குதலில் இஸ்ரேல்(Israel) போரியலில் புதிய முறையை கையாளுகின்றது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஈரான்-இஸ்ரேல் தாக்குதலானது மட்டுப்படுத்தப்பட்ட காலத்தை தாண்டியும் தற்போதுவரை தொடர்வதால் இதன் தீவிரம் அதிகரித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து போர் அச்சம் காரணமாக மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளார்கள்.
இருநாடுகளிடைக்கிடையில் தொடரும் தாக்குதலில் இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணைகள் வெடித்து சிதறுகின்றன.
மேலும், தாக்குதல்களில் உயிரிழப்போர் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன” என குறிப்பிட்டார்.
ஈரான்-இஸ்ரேல் தாக்குதல் தொடர்பில் இன்றுவரை இடம்பெற்ற விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
