பெருவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பெருவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பெருவின் மத்திய கரையோர பகுதியில் இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் மையம்கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரு - லிமாவின் வடபகுதியில் தனது வாகனத்திற்கு வெளியே நின்றிருந்த 36 வயது நபர் ஒருவர் ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
M5.7 earthquake hits near the Central Peru coast, felt in Lima. No major damage reported. Stay alert for aftershocks. #SismoPeru #Lima #TerremotoPeru #sismo #Terremoto #deprem pic.twitter.com/uKVeyc5xx8
— GeoTechWar (@geotechwar) June 15, 2025
சேதமடைந்த வீதிகள்
இதில் காயமடைந்த ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வீதிகளும் கல்வி நிலையங்களும் சேதமடைந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளிற்குள் சிக்குண்ட வாகனங்களையும்,சேதமடைந்த வீடுகளையும் காண்பிக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
