இஸ்ரேல் பிரதமரிடமிருந்து மோடிக்கு அழைப்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக இந்தியப் பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் அதிகரித்து வரும் விரோதப் போக்கு மற்றும் அதன் நிலைமை குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியப் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய அமைதி
இருப்பினும், நடந்து வரும் மோதல்கள் குறித்து இந்தியப் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் ஊடக அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், அப்போது இரு அமைச்சர்களும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து விவாதித்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
