யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
யாழ். மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசை
எனினும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது.
எரிபொருள் நிரப்பு நில்சியங்கள் வழமைபோன்று செயற்பட்டு எரிபொருள் விநியோகத்தை செற்கொண்டு வருகின்றன.
செயற்கையான தட்டுப்பாடு
செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.” என கூறியுள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் எரிபொருளின் விநியோக தளம்பலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாக அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
