வாகனங்களில் எரிபொருளை சிக்கனப்படுத்தலாம்! மோட்டார் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவல்
நகரங்களில் நிறுவப்பட்டுள்ள வீதி அடையாளங்களுக்கான சமிஞ்சை இயந்திரங்களால் அதிகமாக எரிபொருளை சிக்கனப்படுத்த முடியுமென மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நகரங்களில் நிறுவப்பட்டுள்ள 200 வீதி அடையாளங்களுக்கான சமிஞ்சை இயந்திரங்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் சிக்கனம்
இந்தப் போக்குவரத்து சமிஞ்சைகள் செயல்பாட்டில் இருக்கும்போது, சாரதிகளுக்கு சரியான நேரத்தில் வீதி சமிஞ்சைகளை அது காட்சிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் வாகனத்தின் இயந்திரத்தை இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கும் என்றும் தேவையற்ற புகைகள் குறையும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் துறை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கான நிதியின், முதல் கட்டமாக 56 மில்லியன் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதில் 33 மில்லியன் ரூபாய் சமீபத்தில் நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 48 நிமிடங்கள் முன்

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
