காசாவில் போர் நிறுத்தம்....! அரபு நாடுகளின் கோரிக்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனுடனான சந்திப்பிலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரிய வருகையில், காசா பகுதியில் நிலவும் மோதல் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.
போர் நிறுத்த கோரிக்கை
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நேற்று (04) ஜோர்தானில் அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அரபு நாடுகளின் பிரதிநிதிகள் போர் நிறுத்த கோரிக்கையை அன்டனி பிளிங்டனிடம் முன்வைத்துள்ளனர்.
எனினும், ஹமாஸ் மீண்டும் பலம் பெறக் கூடும் என்ற காரணத்தால் போர்நிறுத்தப் பிரகடனத்திற்கு தாம் உடன்படவில்லை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan