போரில் தோற்றதாக ரஷ்யாவிடம் சரணடைகிறதா உக்ரைன்? வெளியான முக்கிய தகவல் - செய்திகளின் தொகுப்பு
நான்காவது முறையாகப் போர் தொடர்பில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 24ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவின் பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15ஆவது நாளாகத் தொடர்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் ரஷ்யா அடங்க மறுக்கிறது.
போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பிலிருந்து சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,