கடுமையான பழிவாங்கலுக்கு தயாராகி வரும் ஈரான்..வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!
ஈரானின் புரட்சிகர காவல்படை கட்டளை மையத்தின் தலைவர் அலி ஷாட்மானி இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்ததை ஈரான் உறுதிபடுத்தியுள்ளது.
ஷாட்மானி, அந்நாட்டின் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஷாட்மானி படுகொலை
அதேவேளை, அவரது கொலைக்கு கடுமையான பழிவாங்கல் வழங்குவதாக ஈரானிய காவல்படையின் கட்டளை மையம் உறுதியளித்ததாகவும் குறித்த அரச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஜூன் 17ஆம் திகதி அன்று இஸ்ரேலிய இராணுவம், ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியாகவும், மிக மூத்த இராணுவத் தளபதியாகவும் அடையாளம் காட்டிய ஷாட்மானியைக் கொன்றதாகக் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது குறித்த தகவலை ஈரானிய காவல்படையின் கட்டளை மையம் ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 14 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam