ஒரே நாளில் மூன்று நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்
24 மணி நேரத்திற்குள் மூன்று நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி வடக்கு ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவின் கட்டிடத்தை குறிவைத்து ஈரானிய இராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு சிரியாவில் உள்ள ஐஎஸ் இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய மொசாட் உளவுத்துறை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து வடக்கு சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்
நேற்று, ஈரான் இராணுவம் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தின் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது, அங்கு இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மீதான ஏவுகணைத் தாக்குதல், ஈரானில் கடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாத அமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும் இந்த மூன்று தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்த அமெரிக்கா, தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan