ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை கடந்த வெள்ளிக்கிழமை(23) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 710 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 22 மணி நேரம் முன்

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
