புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சிறப்புற இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்
இந்திய துணைதூதரகமும் இலங்கை யோகா பயிற்சி கல்லூரியும் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமானது இன்றையதினம் (20.06.2025) காலை 7.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் இடம்பெற்றிருந்தது.
பிரதம விருந்தினர்கள் பிரார்த்தனை அரங்கிற்கு வரவேற்று அழைத்து வரப்பட்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கை யோகா பயிற்சி கல்லூரிக்கு யோகா உபகரணங்கள் இந்திய துணை தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், பங்குபற்றிய அனைவருக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
1800 மாணவர்கள்
மாஸ்டர் ஜெயம் ஜெகன் அவர்களின் நெறியாள்கையில் விஷேட யோகா ஆற்றுகை இடம்பெற்றிருந்தமை வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யோகா, கராத்தே, சிலம்பம், வர்மக்கலை துறைகளினுடைய மாஸ்டர் ஜெயம் ஜெகனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இந்திய துணை தூதுவர் சாய்முரளி, இந்திய துணைதூதரக உயர் அதிகாரி சங்கரன் ஐயா, பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் ,ஓய்வு நிலை பிரதிகல்வி பணிப்பாளர் பேரின்பநாயகம், மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், 1800 மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
