கோவிட் தொற்றாளர்கள் அனர்த்த நிலைமையை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து புதிய அறிவித்தல்
கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் அனர்த்த நிலைமையை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து புதிய அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும், விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுகிறது.
இதனால் உடலில் நீரிழப்பு (dehydration) நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 2 நாட்கள் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
