தூசு தட்டப்படும் பொறியியலாளர் பிரேமலதா விவகாரம்! இனியபாரதியின் நெருங்கிய சகா மீது கிடுக்குப் பிடி
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் துப்பாக்கி கலாசாரம் எவ்வாறு பேசுபொருளாக மாறியதோ அதேபோன்று தற்போது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் சகாக்களின் கைதுகளும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிள்ளையானின் கைதை தொடர்ந்து, இனியபாரதி மற்றும் அவரின் முன்னாள் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றையதினம் இனியபாரதியின் முன்னாள் சாரதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவர் இனியபாரதியின் மிக நெருங்கிய ஒருவராக 2007 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணப்பட்டார்.
தற்போது இவர் பொத்துவில்-மட்டக்களப்பு வீதியில் சேவை புரியும் பேருந்து சாரதியாக பணிபுரிகின்றார்.
இந்நிலையில் இனிய பாரதி மற்றும் அவரின் சாரதி தொடர்பான பல விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,
