எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் கோரிக்கை
எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடபிராந்திய கடற்றொழிலாளர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன.
கச்சத்தீவு மீட்பு போராட்டம்
இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடல் தொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.
எமது கடல் தொழில் அமைச்சர் வழங்கிய பதிலடியை நாங்களும் கூற விரும்புகின்றோம். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்து மீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும்,இராமேஸ்வர கடற்றொழில் சங்கங்களினால் இலங்கைக்கு வந்து பேச்சு வார்த்தை மேற்கொள்ளச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகின்றது.
இந்திய கடற்றொழிலாளர்கள் சட்ட விரோதமான தொழிலையே மேற்கொள்கின்றனர்.இதனை முற்று முழுதாக நிறுத்த வேண்டும்.கச்சை தீவை இலங்கைக்கு ஒப்பந்த மூலம் வழங்கும் போது அதற்கான பல்வேறு விடையங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது. எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்
இலங்கை வட பகுதி கடற்றொழில் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.எமது கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்ற செயல்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை எல்லைக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரினுடைய கடமை என்பதை நாங்கள் கருதுகிறோம்.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல்,எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
